Friday, November 09, 2007

ரயில் பயணங்களில்



பயணிகளின் கணிவான கவனத்திற்காக
சொன்ன அந்த அறிவிப்பு
அன்று மட்டும் எனக்கு
அசிரீரி போல கேட்டது

பச்சைக்கொடி காட்டிய ஸ்டேஷன் மாஸ்டர்
உன் தந்தையாய் இருந்திருக்க கூடாதா
என்ற எண்ணம் என்னுள் வந்து போனது

நீ அருகில் இருந்ததால்
அன்று மட்டும் தர்மப்ரபுவானேன்
ஒரு நமட்டு சிரிப்புடன் சென்றாள்
பிச்சைக்கார கிழவி

சக்கரை இல்லாத காபி
ஆறிப் போன இட்லி
இரண்டு நாட்களுக்குமுன் செய்த சமோசா
அன்று மட்டும் எல்லாமே சுவைத்தது

அதிகாலை வானத்தை விட
அழகாக இருந்தது நீ முறித்த சோம்பல்
ஒரு நாளில் இரண்டு விடியல்
இருந்திருக்க கூடாதா...

எல்லா பயணத்திற்கும் ஒரு முடிவு உண்டு
என நான் யோசிக்கவே இல்லை
ஆனால் நம் வாழ்க்கையின் விதி
வேறு விதமாக யோசித்து விட்டது

திடீரென எதிர் பக்கத்தில் இருந்து
வேகமாக கடந்து செல்லும்
ரயில்வண்டியை போல
நீ என்னை கடந்து சென்று விட்டாய்..

இன்றும் என் பயணங்கள் தொடர்கின்றன
தனிமையாக அல்ல
உன் நினைவுகளோடு இனிமையாக ...

Tuesday, November 06, 2007

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்






அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..


இந்த தீபாவளி திருநாளில் உங்கள் இல்லத்தில் சந்தோஷம் பெருகுக... புத்தாடை மத்தாப்பு அதிர வைக்கும் சரவெடி என அமர்க்களமாய் கொண்டாடுங்கள் ..


இந்த போஸ்ட் தலை தீபாவளி கொண்டாடும் அம்பி, பொற்கொடி, ரம்யா, போன்ற புதுமணத் தம்பதிகளுக்கு ஸ்பெஷல் டெடிகேஷன் ...


Thursday, November 01, 2007

வெற்றிகரமான மூன்றாவது வருடம்

நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சு ..இந்த ரெண்டு வருஷத்துல இந்த தமிழ் கூறும் நல் உலகத்துக்கு கொஞ்சம் கருத்துக்கள் சொல்லியாச்சு...அதுக்காக நிறைய ஆப்பும் வாங்கியாச்சு..

அமெரிக்காவுல ஆரம்பிச்ச இந்த பொழுது போக்கு இப்ப வரைக்கும் தொடருது.. அங்க இருந்த அந்த ஒரு வருஷமும் எனக்கு ப்ளாக் படிச்சதுல நல்ல டைம் பாஸ் ஆச்சு..

ப்ளாக் எழுதினதால சில புது ப்ரெண்ட்ஸ் கிடச்சாங்க .. சில பழைய ப்ரெண்ட்ஸ் ரீ என்ட்ரி குடுத்தாங்க...

இந்த பெரிசுங்க சில பேர் " இந்த காலத்து பசங்க எல்லாம் எங்க தமிழ் படிக்கறாங்க எப்ப பார்த்தாலும் இங்கிலீஷ்லேயே பேசறாங்க" னு ஓவரா பீல் பண்ணி டயலாக் அடிப்பாங்க. அந்த மாதிரி பேச்சை கேட்டவுடனே அவங்க கிட்ட ப்ளாக் பக்கம் போய் பாருங்க அப்ப தெரியும் உங்களுக்கு இந்த காலத்து பசங்க எவளோ தூரம் தமிழ் தெரிஞ்சு வச்சிருகாங்க அப்படின்னு சொல்லணும் போல இருக்கும்.

நான் கவிதை அப்படின்னு பண்ண தமிழ் கொலை எல்லாத்தையும் தாங்கிட்டு இருந்த உங்க எல்லாருக்கும் என்னோட நன்றி ...